எல்லைமீறும் ரவுடி பேபியின் ரவுசு..! இது எங்க போய் முடியுமோ.

சமூகவலைத்தளங்கள் அனைவரிடமும் இல்லாத நேரத்தில் ஒருவர் பிரபலம் ஆவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அதிலும் திரைப்படம் நடிக்க விரும்புபவர்கள் பல இடங்களில் ஏறி இறங்க வேண்டும். ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை. ஒரே ஒரு வீடியோ மூலம் உலகம் முழுவது பிரபலம் ஆகா முடிகிறது.

மேலும், டிக் டாக் என்ற செயலின் மூலம் பல பேர் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலம் ஆனவர் தான் ஜிபி முத்து. கோமாளி போல் ஏதாவது ஒரு வீடியோ செய்யும் இவருக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. இவர் திருமணம் ஆனவர்.

இதை தொடர்ந்து, இவருக்கு ஜோடியாக டிக்டாக்கில் கலாய்க்கப்படுபவர் தான் ரவுடி பேபி சூர்யா. இவர்கள் இருவரும் சேர்ந்து பல டூயட் பாடியிருக்கிறார்கள். அந்த வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது. சமீபத்தில், சூர்யா குறிப்பிட்ட ஜாதி குறித்து தவறாக பேசியதாக அவரது ஐடியை டிக் டாக் பிளாக் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இருவரும் இணைந்து பிரபல யூ டியூப் சேனலில் பேட்டி என்னும் பெயரில் அலப்பறைகள் செய்து வந்தார்கள். அதில் எனக்கு ஏதாவது நடக்குதுன்னா என் புருசனுக்கும் முன்னாடியே என் மாமாவுக்குத் தெரியும் என வரம்புமீறி அழிச்சாட்டியம் செய்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.