ரகசிய காதலனை கொன்ற பிரபல துணை நடிகை

பிரபல துணை நடிகரான ரவியை கொன்றது ஏன் என்பது குறித்து நடிகை தேவி பொலிசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் தேவி, சீரியல் மற்றும் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரவியை கொன்ற வழக்கில் தேவி, அவரது கணவர் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், ரவியும் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

ரவி இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருந்ததுடன் என்னை அவருடைய படத்தில் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக கூறினார்.

இதனால் அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன், ஆனால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

அடிக்கடி என்னுடைய வீட்டுக்கும் வருவார், இதுபற்றி என்னுடைய கணவருக்கு தெரியவந்ததும் என்னை கண்டித்தார்.

நானும் குழந்தைகளின் நலன்கருதி விலகிச்சென்றேன், வீட்டையும் வேறொரு பகுதிக்கு மாற்றினேன்.

இதனால் கோபப்பட்ட ரவி என்னுடைய தங்கை வீட்டுக்கு சென்று சண்டையிட்டார், ஆபாசமாக பேசினார்.

இந்த தகவலை என் தங்கை கூறியதும், நாங்கள் அங்கு சென்றோம், எங்களையும் ஆபாசமாக திட்டி தவறாக நடக்க முயன்றார்.

இந்த தகராறில் என் தங்கையின் மகளை கொலை செய்ய முயற்சித்தார், ஆத்திரத்தில் நான் உருட்டு கட்டையால் தாக்கினேன்.

தொடர்ந்து அடித்ததில் ஏற்கனவே மதுபோதையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.