“நாட்டை அழகு படுத்துவோம்” மன்னாரிலும் மனம் மயக்கும் தெரு ஓவியங்கள்!

நாட்டை அழகு படுத்துவோம் செயற்திட்டத்தின் அடிப்படையில் தன்னார்வம் மிக்க இளைஞர்களின் முயற்சியில் மன்னார் நகர் பகுதி முழுவதும் வண்ணமயமான சித்திரங்கள் மூலம் அழகு படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் கச்சேரி மற்றும் பொலிஸ் நிலைய பகுதிகளில் தமிழர் பாரம்பரியங்கள், சுற்றுலா தளங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான ஓவியங்கள், நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
.
மாவட்ட இளைஞர்கள் பல நாள் முயற்சியிலும் மன்னார் வாழ் மக்களின் நன்கொடைகளின் மூலமும் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டதுடன் இளைஞர்கள் சிறுவர்களும் குறித்த அழகு படுத்தும் செயற்திட்டதில் ஆர்வமாக கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

குறித்த ஓவியங்களில் இராவணன், பண்டார வன்னியன், எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களின் ஓவியங்கள் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளன. இளைஞர்களின் முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுள்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.