போராட்டம் பற்றி நடிகை கங்கனாவின் கருத்து..!!

பிரபல நடிகை கங்கனா ரனாவத் தற்போது நாடு முழுவதும் மிகவும் தீவிரமாக நடந்துவரும் CAA எதிர்ப்பு போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகம் என்கிற பெயரில் வன்முறை செய்ய கூடாது. சுதந்திரம் பெற்றதற்கு முன் இருந்த நிலைமை தான் தற்போது உள்ளது. அப்போது நம்மை capture செய்த வெளிநாட்டினரை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். ஆனால் தற்போது இருக்கும் தலைவர்கள் நம்மில் இருந்து வந்தவர்கள் தான். இத்தாலி அல்லது ஜப்பானில் இருந்து வரவில்லை. (காங்கிரஸ் தலைவரை மறைமுகமாக இப்படி விமர்சிக்கிறார்).

இந்திய மக்கள் தொகையில் 3 முதல் 4 சதவீத மக்கள் மட்டுமே வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள் அவர்களை நம்பி தான் இருக்கிறார்கள். அதனால் இப்படி பேருந்துகளை எரிப்பது தவறு. ஒரு பேருந்தின் விலை மிக அதிகம்” என கங்கனா கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு கங்கானாவை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். நாட்டில் வரி எந்த விதத்தில் வசூல் ஆகிறது என்பது கூட தெரியாமல் இப்படி அவர் மோடிக்கு ஆதரவாக பேசவேண்டும் என்பதற்காக பேசியுள்ளார் என பலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.