இலங்கை தெற்கு அதிவேக வீதியில் 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வருக்கு நேர்ந்த சோகம்!

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன – குறுந்துகஹஹெத்தெம்ம பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்று கொள்கலன் வாகனத்துடன் மோதியதினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ் விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.