காத்தான்குடியில் மதம் மாறி திருமணம் செய்த முஸ்லிம் இளைஞன் : தமிழ் யுவதியுடன் ஆலயத்தில்!

வாழைச்சேனை பேத்தாளையை சேர்ந்த தமிழ் யுவதிக்கும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கும் புதுக்குடியிருப்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்துசமய முறைப்படியும் கலாசார முறைப்படியும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

நேற்று (23) இந்த திருமணம் நடந்தது.

இளைஞனுக்கு தமிழ் முறைப்படி தமிழ் பெயர் சூட்டப்பட்ட பின்னரே திருமணம் நடைபெற்றது.

நீண்ட நாள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.