மத்தள விமான நிலையத்திற்கு இந்தியாவின் உதவி தேவையில்லை! கோட்டாபய

மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சர்வதேச செய்தியாளர்களை ஜனாதிபதி சந்தித்து பேசியிருந்தார். இதன்போது, மத்தள விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய ஜனாதிபதி, “மத்தள விமான நிலையம், நாட்டின் மாற்று சர்வதேச விமான நிலையமாக இலங்கை விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்படும்.

இந்த திட்டம் குறித்து இந்தியாவுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

இதனிடையே, இந்திய நிறுவனங்கள் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.