பேஸ்புக் நிறுவனத்திற்கு கொழும்பு நீதவான் விடுத்துள்ள உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் பேஸ்புக் அடங்கலான தகவல்கள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்களை இரகசிய பொலிஸாருக்கு வழங்குமாறு பேஸ்புக் தலைமை நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு குற்றவிசாரணைத் திணைக்களம் நீதி மன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.