இன்றைய ராசிபலன் (15.12.2019)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 15 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. தாயாருடன் மன வருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சகோதரர் களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட் டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்களால் உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரை யும். தாயின் நீண்டநாளைய விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல் நடைபெறும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகி மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவது மகிழ்ச்சி தரும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நீண்டநாளாகச் செலுத்த நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சி யுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களின்போது கொண்டு செல்லும் பொருள்கள் மீது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்
மகரராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு களைத் துணிந்து எடுப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படக் கூடும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும். ஆனால், பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது.

மீனம்
மீனராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். மனதில் தேவை யற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம். தாய்வழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.