பிறப்புறுப்பை துன்புறுத்தி ஆசிரியர்கள் தண்டனை.!

கோயம்புத்தூரில் இருக்கும் பள்ளி ஒன்றில் மாணவரை தண்டிக்க அவரது பிறப்பு உறுப்பை பிடித்து ஆசிரியர்கள் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கோயம்புத்தூர் அருகில் இருக்கும் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகின்றது. அங்கே 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் செல்போன் கொண்டு வந்ததாக கூறி ஆசிரியர்களின் கட்டளைக்கு கீழ்படியாமல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த மாணவனை தண்டிக்க திட்டமிட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் 11ஆம் வகுப்பு மாணவரை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று அடைத்து அங்கே அவரது பிறப்புறுப்பை துன்புறுத்தி இருக்கின்றனர்.

இதன் காரணமாக வேதனை தாங்காமல் துடிதுடித்த மாணவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவமானது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.