மகளை நண்பர்களுக்கு பேரம் பேசிய தந்தை.. இதுவரை 25 பேர்.. துடிதுடித்த சிறுமி!

இந்தியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தை அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தனக்கும் தனது தாய்க்கும் பாலியல் தொல்லை கொடுத்துவருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி படிக்கும் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர் உளவியலாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ந்து அடைந்துள்ளனர்.

தனக்கும், தாய்க்கும் நடந்த கொடுமை குறித்து சிறுமி கூறியவை, தன் தந்தையின் நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து மது அருந்தினர். பின்பு என் அம்மாவை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது எனது தந்தை என்னையும் அறைக்குள் பிடித்து தள்ளிவிட்டார். அவர்கள் என்னையும் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கூறினார்.

மேலும், தந்தை என்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து தெரியவந்தவர்களுக்கு அனுப்பி, அவர்களுடன் பேரம் பேசி காசு வாங்கிக்கொண்டு என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தார் என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர். முதற்கட்டமாக 25 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.