வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்!

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூந்தோட்டம் அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த போதே சகோதரர்களான 16, 19,21 வயதுடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, சவல் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன.

இந்நடவடிக்கை வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சம்பத் பெரேராவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திசாநாயக்க தலைமையில் சென்ற பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யபட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.