தர்பாரின் சும்மா கிழி..!! தியேட்டரெல்லாம் கிழிய போகுது…நடிகர் ரஜினிகாந்த் அதிரடி.!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தர்பார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை லைக்கா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும்., ரஜினியுடன் லைகா நிறுவனம் இரண்டாவதாக கூட்டணி வைத்துள்ளது.

முதலில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில்., இப்படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனையை படைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ரஜினியின் அடுத்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா., நிவேதா தாமஸ்., சுனில் ஷெட்டி., யோகி பாபு, தம்பி ராமையா போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையமைப்பு பணியை வழக்கம் போல அனிருத் மேற்கொண்டுள்ள நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முதற்பார்வை வெளியானது.

இந்த நிலையில்., தற்போது தர்பார் திரைப்படத்தின் முதற் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் ரஜினி சும்மா கிழி என்று கூறியதும்., இறுதியில் திரையரங்கில் இப்பாடல் கிழியப்போகிறது என்று ரஜினி கூறியிருந்ததும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.