செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பாகி ஓவியா கூறிய பதில்.!

தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தின் மூலம் நடிகை ஓவியா அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றாலும் அதன் பிறகு ஓவியாவை ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

ஆனால், பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட  ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் இன்றளவும் ஓவியா ஆர்மி பரபரப்பாகவே இருக்கின்றது. இந்நிலையில், செய்தியாளர்கள் சமீபத்தில் ஓவியாவிடம் கமல் – ரஜினி அரசியல் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்வியானது ஓவியாவிற்கு கடும் கோபத்தை உருவாக்கியது. அப்போது அது குறித்து பதில் கூறாமல் ஓவியா சென்றுவிட்டார்.

அதன் பின்னர் தற்போது, தன்னுடைய இணையப் பக்கத்தில், “அரசியல் சார்பற்ற நடிகர், நடிகைகளிடம் அரசியல் குறித்து கேள்வி கேட்பதை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும். இந்த கேள்விகளை பொது மக்களிடம் கேட்டால் எதிர்பாராத பதில்கள் கிடைக்கும்.” என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி பதிவிட்டிருந்தார். இந்த கேள்வி நியாயமானது என்று பலரும் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.