சினிமாவிற்கு வந்ததால் நான் இதையெல்லாம் இழந்தேன்.. வெளிப்படையாக பேசிய நடிகை!!!

கன்னடத்தில் வெளிவந்த ‘கிரீக் பார்ட்டி’ படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் அமைந்தது. மேலும், ரஷ்மிகா இளைஞர்களின் கனவு கன்னி என்று கூட சொல்லலாம்.

இதன்பின், தற்போது நடிகர் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகமாகவுள்ளார் ரஷ்மிகா. அண்மையில் கூட இவரின் சிறு வயது புகைப்படத்தை வைத்து சர்ச்சைகள் கிளம்பியது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ள ரஷ்மிகா சில விடங்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும், அவர் கூறியிருந்தது என்னவென்றால், ’சினிமாவில் ஒரு நடிகையாவது சாதாரண விஷயம் கிடையாது. நான் சினிமாவில் கவர்ச்சியாக நடித்ததால் எங்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினர் என்னை ஒரு மாதிரி கேவலமாக பார்த்தார்கள். இதையெல்லாம் விட என்னுடைய நெருங்கிய தோழிகள் என் நட்பை முறித்து கொண்டார்கள்.

மேலும், இந்த விஷயத்தை அவர்களுக்கு எப்படி புரியவைப்பது, இது வெறும் சினிமாவிற்காக தான் என்று நான் தவித்தேன். இதனால், எனக்கு சில காலங்கள் மிகவும் வேதனையாக இருந்தது’ என்று மனம் உருகும் வகையில் கூறியுள்ளார் ரஷ்மிகா மந்தண்ணா.