இன்றைய ராசிபலன்(24.11.2019)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 24 -ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். நண்பர் களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கி விடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால் பேச்சில் நிதானம் தேவை. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டா கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி உண்டாகக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரிய அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்கள் விஷயத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

கடகராசி அன்பர்களே! தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

கடகராசி அன்பர்களே! தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்மாமன் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள் வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காலையிலேயே எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். செலவுகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்

துலாம்
துலாராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் முதலீடு தொடர்பாக உங்கள் ஆலோச னையைக் கேட்டு வருவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். விற்பனையும் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

காரியங்களில் பொறுமை தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன், சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். குடும்பப் பெரியவர்களு டன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.