இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை..!!

இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகையை ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோடி அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அழைப்பினை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ டெல்லிக்கு வருகைதர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துவதாகவும்,

இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23ஆம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.