பக்கத்துமாநில பெண்களை கடத்தி சென்னையில் விபச்சாரம்.. சீரழியும் சென்னை

தமிழகத்தில் விபச்சாரம், குட்கா பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டவையாகும். இதனை பதுக்கி வைத்து வைப்பதோ அல்லது யாருக்கும் தெரியாமல் விபச்சார தொழில் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த நிலையில்., தமிழகத்தின் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பெங்களூர் அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபட்டுத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது சென்னையில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தொழிற்பேட்டை அருகேயுள்ள மண்ணூர்பேட்டையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்தபோது 35 வயதுடைய இளைஞர் மருதராஜ் மற்றும் பிரபாகரன் என்ற 35 வயது இளைஞர்கள் சேர்ந்து பெங்களூரிலிருந்து 3 இளம்பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 3 பெண்களையும் மீட்ட காவல் துறையினர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில்., பெண்களை வலுக்கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்திய மருதராஜ் மற்றும் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் வெளிமாநில அழகிகளை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.