மட்டக்களப்பு வாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியிலிருந்து இன்று பெண்ணொருவரின் சடலம் மீட்டுள்ளது.

நேற்று மாலை வெளியூரிலிருந்து பஸ் ஒன்றில் பனிச்சங்கேணிப் பகுதிக்கு வந்திறங்கிய குறித்த பெண் காணாமல் போயிருந்த நிலையில்இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவி மருங்கிலுள்ள உல்லாச விடுதியொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கமராவில் குறித்த பெண் வாவியில் குதிக்கும் காட்சி பதிவாகியிருந்ததாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.