18ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார் – தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய..

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நாடாளவிய ரீதியில் நடந்துமுடிந்துள்ளது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனாதிபதியாக எதிர்வரும் 18ஆம் திகதி பதவி பிரமாணம் செய்வார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதி யாராக இருந்தாலும், அவர் எதிர்வரும் 18ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்கமைய முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு வழங்க முயற்சிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.