இளம்பெண்ணை மயக்கி கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த சைக்கோ கும்பல்.!

தமிழகத்தின் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியை சார்ந்த தச்சு பணியாளராக பணியாற்றி வரும் இரண்டாவது மனைவியின் வயது 26. இவரின் கணவர் கடந்த மாதத்தின் போது பணியின் காரணமாக வெளியூருக்கு சென்ற நிலையில்., இல்லத்தில் முதல் மனைவியின் பிள்ளைகள் இருந்துள்ளனர். இந்த நிலையில்., கடந்த மாதத்தின் 18 ஆம் தேதியன்று இல்லத்திற்கு அருகேயிருக்கும் கோவிலில் திருவிழாவானது நடைபெற்றுள்ளது.

இந்த தருணத்தில்., வீட்டில் வெளியே பெண்மணி இருந்த சமயத்தில்., இதே பகுதியை சார்ந்த ரமேஷ்குமார் மற்றும் ஹரிஷ்குமார் இருவரும் கோவில் பிரசாதம் என்று கூறி மயக்க மருந்து கலந்த இனிப்பு பலகாரத்தை கொடுத்த நிலையில்., ஒன்றும் அறியாத பெண்மணி பலகாரத்தை வாங்கி சாப்பிட்ட சில நிமிடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இரவு நேரத்தில் இவரை யாரும் காணாத நிலையில் பெண்ணை வீட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து., இந்த கொடூர செயலை வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்து., அவரின் நகையையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளான்கள். மேலும்., மயக்கத்தில் இருந்த பெண்ணை எழுப்பி அனைத்தையும் கூறி இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான்கள். மேலும்., வாட்ஸப்பிலும் அனுப்பி மிரட்டியுள்ளான்.

இதனால் பயந்து போன பெண் தங்க சங்கிலியை மட்டுமாவது தரகூரிய நிலையில்., நேரில் வந்து வாங்கும் பட்சத்தில் தருவதாக கூறிய கொடூர கும்பலானது., பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளது. மேலும்., இந்த சமயத்தில் இவனது கூட்டாளிகளையும் ஒன்று சேர்த்து சைக்கோ கும்பலின் பாலியல் வன்கொடுமையால் பெண் பரிதாபமாக பல துயரங்களை அனுபவித்துள்ளார்.

கொடூர கும்பலின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் வசம் இருந்து தப்பிக்க இயலாமல் இருந்த நிலையில்., வெளியூரில் இருந்து வந்த கணவருக்கு பகீர் தகவலானது தெரியவந்துள்ளது. மேலும்., மூன்று முறை தற்கொலைக்கு முயன்றும் உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலோடு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., சைக்கோ கும்பலின் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கும்பலை தேடி வருகின்றனர்.