டிக்டாக் மோகம்… குளியல் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் சரண்யா. இந்த தொடரில் குறும்புத்தனமான மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தவர் சரண்யா.

இந்த சீரியலில் சரண்யா முழுவதும் புடவை அணிந்து குடும்ப குத்துவிளக்காக இருப்பார். சரண்யாவுக்குக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதனை தொடர்ந்து சரண்யா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரன் என்ற சீரியலில் மாடர்ன் உடையணிந்து நடித்து வருகிறார். தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சரண்யா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்கள் பதிவு செய்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் சரண்யா பம்புசெட் ஒன்றில் குளிப்பதை டிக் டாக் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.