மட்டக்களப்பில் விபச்சாரத்தில் 14 வயது சிறுமி..!!!

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தியதோடு பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறிய தந்தை மற்றும் தரகர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானைக் குளப்பகுதியில் தரம் 8 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்ரு முன் தினம் இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த சிறுமியின் தரகரை தொடர்பு கொண்டு பேசியதோடு அவரை கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து சிறுமியின் சிறிய தந்தையையும் கைது செய்த பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் பூப்படைந்த நிலையில் அவரை சிறிய தந்தையார் பாலியல் துஸ்பிரயோகம் மேற் கொண்டதோடு சிறுமியை விபச்சாரத்திலும் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியை மீட்கும்வரை சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

விபச்சார தரகர் மற்றும் ஆசிரியர் ஒருவர் மற்றும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் இந்த பாலியல் துஸ்பிரயோக விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபா பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றதாகவும் ,தலைநகரில் மட்டும் இரு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

சம்பவத்தில் 38 வயதுடைய குமார் என்றழைக்கப்படும் சிறுமியின் சிறிய தந்தையார், மற்றும் 35 ம் கொலனி வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தரகர் ஆகிய இருவரையும் கைது செய்த பொலிஸார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் , சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 5 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.