ஆரஞ்சு பாயாசம்..! செய்வது எப்படி..!

தேவையான பொருட்கள் :

பால் – 4 கப்

ஆரஞ்சுபழம் – 4

சர்க்கரை – 1 கப்

ஆரஞ்சு எசன்ஸ் – 3 சிட்டிகை

புட்கலர் ஆரஞ்சு பவுடர் – ஒரு சிட்டிகை

கண்டென்ஸ்டு மில்க் – அரை கப்.

செய்முறை :

சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். அதன் பின்னர் ஆரஞ்சு கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து பாலில் எடுத்து ஊற்றவும்.

பிறகு கண்டென்ஸ்டு மில்க்கையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி சிறிது நேரம் ஆறிய பின்பு ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்து நன்றாக குளிர வைக்கவும்.

ஆரஞ்சுப் பழத்தின் தோலை உரித்து அதன் விதையை நீக்கி விட்டு சிறு, சிறு துண்டுகளாக எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை குளிரவைத்துள்ள கலவையில் சேர்த்து கிளற மீண்டும் குளிரவைக்கவும்.

சுவையான ஆரஞ்சு பாயாசம் ரெடி.!