14 உயிரை காவு வாங்கிய மணமகளின் சாபம்…

இறந்த மனைவியிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றுவதற்காக உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிந்தாஹரன் சவுகான் என்பவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மணமகள் ஆடையில் வலம்வருகிறார்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியை சேர்ந்த சிந்தாஹரன் சவுகான், 30 ஆண்டுகளாக மணமகள் உடையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அவருடைய கதை வித்தியாசமாகவும் வினோதமாகவும் தோன்றலாம், ஆனாலும் அதுதான் உண்மை.

தற்போது 66 வயதான சவுகான் இதுகுறித்து கூறுகையில், “கடந்த ஆண்டுகளில் எனது குடும்பத்தில் 14 பேரை நான் இழந்துவிட்டேன். மணமகளாக அலங்கரிக்கத் தொடங்கிய பின்னரே மரணங்களின் சங்கிலி நிறுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
அப்போது தானியங்கள் வாங்கும் கடை உரிமையாளருடன் நட்பு கொண்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்காலி கடை உரிமையாளரின் மகளை சவுகான் மணந்தார். ஆனால் சவுகான் குடும்பத்தினர் அவரது திருமணத்திற்கு கடும் ஆட்சேபனைகளை எழுப்பினர்.

எனவே சவுகான் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் தனது பெங்காலி மனைவியை விட்டுவிட்டு வீடு திரும்பினார்.

கணவனின் இந்த துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்து கொண்டாள். ஒரு வருடம் கழித்து மீண்டும் தினாஜ்பூருக்குத் திரும்பியபோது தான் சவுகான் இதைப் பற்றி அறிந்தார்.சவுகான் முதலில் 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது முதல் மனைவி சில மாதங்களுக்குள் இறந்தார்.

21 வயதில், மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூரில் ஒரு செங்கல் சூளையில் வேலைக்குச் சென்ற அவர், தொழிலாளர்களுக்கான உணவுக்காக தானியங்களை வாங்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பியபோது, ​​அவரது குடும்பத்தினர் அவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அந்த முடிவு மீண்டும் அவருக்கு துயரத்தை ஏற்படுத்தியது.

“எனது மூன்றாவது திருமணத்திற்கு சில மாதங்களுக்குப் பிறகு, நான் நோய்வாய்ப்பட்டேன். ஒவ்வொருவராக என் குடும்ப உறுப்பினர்கள் இறக்கத் தொடங்கினர். என் தந்தை ராம் ஜியவன், மூத்த சகோதரர் சோட்டாவ், அவரது மனைவி இந்திராவதி, அவர்களது இரண்டு மகன்கள், தம்பி படாவ் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். பின்னர் எனது சகோதரர்கள் “மூன்று மகள்கள் மற்றும் நான்கு மகன்களும் இறந்தனர்,” என்று அவர் கூறினார்.

தனது கனவுகளில் தனது பெங்காலி மனைவியை தவறாமல் அடிக்கடி பார்ப்பேன் என்று சவுகான் கூறுகிறார்.

“நான் அவளை காட்டிக் கொடுத்ததாக குற்றம் சாட்டுவாள், சத்தமாக அழுவாள். ஒரு நாள் என் கனவில் வந்தபோது, நான் மன்னிப்பு கேட்டு, என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றும்படி அவளிடம் கேட்டேன்.

மணமகளாக ஆடை அணிவதன் மூலம் அவளை என்னுடன் வைத்திருக்கும்படி அவள் என்னிடம் கேட்டாள். நான் ஒப்புக்கொண்டேன் “அன்றிலிருந்து, நான் ஒரு மணமகளாக ஆடை அணிந்து வருகிறேன். குடும்பத்தில் இறப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

அவரது உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், அவரது மகன்களான ரமேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் அவரது மூன்றாவது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார் என்றும் சவுகான் கூறினார்.

“ஆரம்பத்தில், மக்கள் என்னைப் பார்த்து சிரித்தனர், ஆனால் எனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக நான் இதைச் செய்தேன் என்பதை தெரிந்துகொண்டு மக்கள் இப்போது என்னிடம் அனுதாபப்படுகிறார்கள்,” என்று கூறுகிறார்.