திருமணத்திற்கு பின்னர் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவது எதனால்?

தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் தம்பதிகளுக்குள் பல விதமான சந்தேகங்கள் இருப்பது வழக்கம்.. அந்த வகையில்., தம்பதிகள் சில சமயத்தில் தங்களால் தாம்பத்தியத்தில் நீடிக்க இயலவில்லை அல்லது ஆண்குறியின் விறைப்புத்தன்மையில் பிரச்சனை உள்ளது என்று கருதுவதும் நடந்து வருகிறது. ஆண்குறியின் விறைப்புத்தன்மை பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

தாம்பத்தியத்தில் ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனை திருமணம் முடித்த பின்னர்., துணை உடல்நலக்குறைவால் இறந்த தருணம் மற்றும் குழந்தையின்மை போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டால் Widower’s syndrome என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த பிரச்சனை துணையை இழந்த சக துணை மனவருத்தத்தில் இருப்பதால்., இவர் தாம்பத்தியம் மேற்கொள்ள இயலாத நிலையானது ஏற்படுகிறது.

இதுமட்டுமல்லாது வெகுவருடங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருத்தல்., தாம்பத்திய உணர்வுகள் இன்றி இருப்பது., மனதில் அடுக்கடுக்கான கவலைகள் மற்றும் கோபங்கள் போன்றவற்றை வைத்திருப்பது தாம்பத்தியத்தில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
தனது மனைவியை திடீரென இழந்து தவிக்கும் கணவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி., இந்த தருணத்தில் ஏற்படும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராமல் இருக்கின்றனர்.

இதனால் எனக்கு வாய்த்தது இவ்வுளவுதான் என்று என்று சில நபர்கள் எண்ணி சலிப்படைந்து., மனரீதியில் உறுதியற்றும் இருக்கின்றனர். பின்னர் காலங்கள் செல்ல செல்ல மறுமணம் செய்யவும் முடிவெடுத்த நிலையில்., மறுமணத்திற்கு பின்னரும் முன்னரும் தாம்பத்திய பயிற்சியை மேற்கொள்ளவும்., இதற்கான முயற்சியை மேற்கொள்ளவும் தவிர்க்கின்றனர். தாம்பத்திய உணர்வுகள் மற்றும் எதிர்பாலின காம உணர்வுகள் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும்.

தாம்பத்தியத்திற்கு தேவையான திறன் இருக்கும் பட்சத்திலேயே இயக்கமும் இருக்கும். அனைத்து விதமான பணிகளுக்கும் பயிற்சி என்பது அவசியம் என்பதை போல., காம உணர்வின் அடக்கம் மற்றும் வெளிப்படுத்துதற்கும் பயிற்சிகள் அவசியம். பொதுவாக எந்த உறுப்பையும் பயன்படுத்தாமல் இருந்தால் அது திறனை இழக்கும். இதனைப்போன்று தான் தாம்பத்திய உறுப்புகளும்.. இது இருபாலருக்கும் பொருந்தும்.. தாம்பத்திய உணர்வு என்பது குற்றமானது இல்லை.. இயல்பானது தான்..