(28-10-2019) இன்றைய ராசிபலன்களைப் பார்ப்போம்..!!

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் அக்டோபர் – 28- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். காரியங்கள் சாதகமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிக ரிக்கும். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கி விடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நாள். மற்றபடி வழக்க மான பணிகளில் பிரச்னை எதுவுமிருக்காது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் அவ்வப் போது சலனம் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி உண்டாகக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

மனதில் சிறு சலனம் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க் கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற் றும் வாய்ப்பு உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப் படும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காலையிலேயே எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது உணவு விஷயத்தில் கவன மாக இருக்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். மனதில் உற்சாகம் பெருக் கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் ஊழியர் கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். சிலர் குடும்பத்துடன் விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். தந்தை வழி உறவினர்களால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபா ரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

இன்று சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். தெய்வ வழிபாட் டின் மூலம் பிரச்னைகளைச் சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் மறைமுகப் பிரச்னைகள் ஏற்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

மீனம்
மீனராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தேவையற்ற செலவு களும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற வினர்கள் வருகை உற்சாகம் தரும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஏற்பட்டாலும், ஆதாயம் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.