காது வலி ஏற்படாமல் பாதுகாப்பது எப்படி?..!!

காதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி செத்து வெளியே வந்துவிடும்.

காதில் அடிக்கடி டிராப்ஸ்களை போடக்கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம்.

காதிலுள்ள முடிகள் மிகவும் முக்கியமானவை, தூசியும் – பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.

காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சத்தத்தை வைத்துக்கேட்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் கேட்க வேண்டும்.

சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து செல்போனில் அதிக நேரம் பேசக்கூடாது.