39க்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்திய அணி..!!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் துடுப்பாடி வரும் இந்திய அணி, கோஹ்லியின் விக்கெட்டுடன் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கோஹ்லி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புஜாரா ஓட்டங்கள் எடுக்காமலேயே ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கி அணித்தலைவர் கோஹ்லி 12 ஓட்டங்களிலேயே நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

தற்போது ரோஹித் ஷர்மா மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் துடுப்பாடி வருகின்றனர். எனினும், இந்திய அணி முக்கியமான 3 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.