6 வயது மகளின் கழுத்தை நெரித்து கொன்ற சித்தி!!!

சென்னையில் தன்னுடைய கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று மாடியிலிருந்து தூக்கி வீசிய சித்தியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சக்கரபானி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.

இவருக்கு ராகவி என்ற ஆறு வயது மகள் உள்ள நிலையில் முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சூர்யகலாவுக்கும் இது இரண்டாவது திருமணம், முதல் கணவருக்கு பிறந்த ஆண் குழந்தையை தன்னுடன் வளர்த்து வந்தார்.

ராகவி தன்னுடைய தம்பி என்றால் அளவு கடந்த பாசம், ஆனால் சூர்யகலாவுக்கு ராகவியை பிடிக்கவில்லை.

இந்நிலையில் சம்பவதினத்தன்று பார்த்திபனுக்கு போன் செய்த சூர்யகலா ராகவியை காணவில்லை என கூறியுள்ளார்.

பதறியடித்து வந்த பார்த்திபன் தேடி பார்த்த போது மூன்றாவது மாடியில் சடலமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையில் ராகவியை சூர்யகலா அடிக்கடி துன்புறுத்தி வந்தது தெரியவந்தது, மேலும் சூர்யகலா தற்போது கர்ப்பமான நிலையில் கருவை கலைக்குமாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

ராகவி மீதான பாசத்தில் கருவை கலைக்கச் சொல்கிறார் என ஆத்திரத்தில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று, சந்தேகம் வராமல் மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்.

இதனையடுத்து சூர்யகலாவை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.