மின்சார ரயிலில் தீ விபத்து!

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில், சத்ரபதி சிவாஜி டெர்மினஸிலிருந்து பன்வெல் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ரயிலின் மேற்பகுதி பற்றி எரிந்தது.

மின்சார ரயில் வாஷி ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலின் மேற்பகுதியில் திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. மளமளவென பரவிய கரும்புகை சூழ்ந்தது.

இதையடுத்து, ரயில் நிலைய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று  தெரியவராத நிலையில், இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தினால் ரயில் நடுவழியில் நின்றதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் தாமதமானது.