பலப்பரீட்சை நடத்தும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா! சொந்த மண்ணில் சாதிக்குமா இந்தியா?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே நடைபெற்ற 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

இதனைத்தொடர்ந்து,  மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட்  கணக்கை தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளது.

தென்ஆப்பிரிக்க மற்றும் இந்தியா இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மோதிய ஜோகன்ஸ் பார்க் டெஸ்ட் போட்டியில் இந்தியா 63 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய மண்ணில் இரு அணிகளும் கடைசியாக 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை  வீழ்த்தி 337 ரன்னில் வெற்றி பெற்றது.

மேலும், சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் இருக்கிறது. டுப்ளசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் விதமாக கடுமையாக போராடி விளையாடும் என எதிர்பார்க்கலாம்.