இங்கிலாந்து பிரதமர் மீது பெண் பத்திரிகையாளர் பாலியல் குற்றச்சாட்டு!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் முன்னணி பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் சார்லோட் எட்வர்ட்ஸ் என்பவர். கடந்த 1999ம் ஆண்டு பத்திரிகை ஆசிரியராகப் வேலைபார்த்த போரிஸ் ஜான்சன், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து போரிஸ் ஜான்சன் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ‘கேவலமான பொய்’ என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நினைவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் சிக்கியிருக்கும் போரிஸ் ஜான்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டு இங்கிலாந்து நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.