வீதியை கடக்க முயன்ற சிறுமி மீது அதி வேகமாக வந்து மோதிய டிப்பர் வாகனம்!

திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஹதரஸ்கொட்டுவ பகுதியில் டிப்பர் வாகனமொன்று சிறுமி மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்ஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதரஸ்கொட்டுவ பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(30) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்ஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் போது ஹதரஸ்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய டபிள்யு.எம்.பிரியங்கிக்கா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி வீதியை கடக்க முற்பட்ட வேளை வேகமாக சென்ற டிப்பர் வாகனம் ஒன்ற சிறுமி மீது மோதியதினாலே சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து குறித்த சிறுமியின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.