தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு..!

பொள்ளாச்சியில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியின் அருகேயுள்ள அனுப்பர்பாளையம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்.

இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் வாடகாஇ வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வாடகை வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த வீட்டிற்கு வெளியாட்கள் அதிகமாக வருவதை உணர்ந்த பொதுமக்கள் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்த நெகமம் காவல்துறையினர் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்த இளம்பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.

பின்னர் புரோக்கரான செல்வராஜையும், அவரது மனைவியான ராஜேஸ்வரியையும் கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.

பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.