வெள்ளப்பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மின்சாரம் துண்டிப்படும்!

கடுமையான வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளான காலி, மாத்தறை மாவட்டங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீர்கேட்டினால் மின் இணைப்பக்களில் ஏற்படும் சோம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என்றும் இலங்கை மின்சாரசபை எச்சரித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கையெடுப்பதாகவும் மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அம்பலங்கொட, சீனிகொட, தலகஸ்வில, கோனாபினுவல, மற்றும் இந்தூருவ உள்ளிட்ட சில பகுதிகளிலும் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.