பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சேரன் செய்த வேலை!

ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் ஒருவர் இயக்குனர் சேரன்.

91 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரன், நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சேரன் வெளியேற்றப்பட்டதற்கு பலரும் தங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை போட்டுள்ளார்.

அந்த டிவிட்டில், தலைவணங்கி நிற்கிறேன்..எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..

நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி என்று பதிவு செய்துள்ளது.