ஆதார் இணைத்தால் மட்டும் தான் பேஸ்புக், வாட்ஸ்அப் உபயோகிக்க முடியுமா?

பேஸ்புக் நிறுவனமே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்கிறது அரசு.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்கு வைத்திருப்போர் தங்களது ஆதார் எண்ணையும் அத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முதலாவதாக நீதிமன்றத்தில் எடுத்து வைத்தது. இது முற்றிலும் பயனாளர்களின் தனியுரிமையை பாதிக்கும் செயல் என பேஸ்புக் நிர்வாகம் தமிழக அரசின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தது.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் ஆகியவற்ற அனைத்தையும் பேஸ்புக் நிறுவனமே வழங்குவதால் சமூக வலைதளத்தின் எந்தப் பக்கத்தில் கணக்கு இருந்தாலும் ஆதார் எண் இணைப்பு அவசியமாகிப் போகும். இவ்விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட தமிழக அரசு, போலி செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், தீவிரவாதப் பதிவு எனப் பல அபாயங்களை அரசு கண்டறிய வசதியாய் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் மட்டுமல்லாது காவல் ஆணையருக்கும் ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டு கடந்த மதம் 24 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அனுப்பியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் வரும் செப்டம்பர் மாதம் பதிலளிக்க கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது தவறான தகவல்களை பரவுவதற்கு பொறுப்பேற்க முடியாது என சமூக வலைதள நிறுவனங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்றும் காட்சி ஊடகங்களை கட்டுப்படுத்த அமைப்பு இருப்பது போன்று சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது?  என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.