வீட்டிற்குள் மனைவியின் அனுமதியுடன் வந்த வேறு ஆண்! பின்னர் நடந்த சம்பவம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி, நபர் ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரைச் சேர்ந்த ரோஷன் பானு என்ற இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், மணியைப் பிடித்து அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் ரோஷன் பானுவுடன் அந்நபர் தகாத உறவு வைத்திருந்ததால் அடித்தாக தெரிவித்தனர்.

அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற ரோஷன் பானு, தாக்கப்பட்ட மணி தனது கணவர் என்றும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி புகார் அளித்தார்.

அதன் பேரில் மணி மீது தாக்குதல் நடத்திய 11 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், அதில் ஒருவரை கைது செய்தனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள், 11 பேர் மீதான வழக்கை திரும்பப் பெறக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையில், ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், தாக்கப்பட்ட மணி என்பவர் அவரது கணவர் அல்ல என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.