அதிகமான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு ஒன்றில் 1,435 பேர் பலி!

பிரான்சில் கடந்த ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பள்ளிகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை இருந்திராத வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பிரான்ஸ் நாடு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பிரான்சில் வீசிய அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு வானொலிக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்தவர்களில் பாதிப்பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறினார்.