காதலியின் வீட்டின் முன்பு தீக்குளித்த காதலன்..!! காதலி சொன்ன ஒரு வார்த்தையால் நடந்த விபரீதம்.!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியின் வீட்டின் முன்பு தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் சென்னை எர்ணாவூரில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் 27 வயதான மொய்தீன். இதே நிறுவனத்தில் எர்ணாவூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணிக்குச் சேர்ந்தார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இருவரும், ஒரு கட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் இறுக்கமாக செல்லும் அளவுக்கு காதலாக மலர்ந்தது.

இந்நிலையில் இந்த ஜோடியின் காதலுக்கு, அவர்கள் சார்ந்த மதத்தின் வடிவில் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் அந்த பெண்ணை மணப்பதில் மொய்தீன் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மதம் கடந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி திருமணத்திற்கு தடை போட்ட நிலையில், காதலன் மொய்தீனை தங்கள் மகள் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, அந்த பெண்ணை வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 20 நாட்களாக அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் மொய்தீனால் முடியவில்லை.

இதையடுத்து கையில் மண்ணென்னை பாட்டிலுடன் காதலியின் வீட்டிற்கு சென்ற மொய்தீன், ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என கேட்டு வாக்குவாதம் செய்தார். காதலி தன்னை மறந்து விடுமாறு கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட அவரது குடும்பத்தினரும் மொய்தீனை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து விரக்தி அடைந்த மொய்தீன், காதலியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்தால் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடலில் தீயுடன் வீதியில் ஓடிய அவரைக் காப்பாற்ற வீட்டில் இருந்து ஓடி வந்த அந்த பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் மொய்தீன் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொய்தீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். வேலைக்கு செல்லாமல் நாடக காதல் வலை வீசி பெண்களை ஏமாற்றிச் செல்லும் சில ஊதாரி இளைஞர்கள் மத்தியில் பொறுப்பான வேலை இருந்தும் காதலித்த பெண் கிடைக்காத ஏக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் இந்த இளைஞர் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.