கொஞ்சம் சிரிங்க பாஸ்.!
நபர் 1 : ஒருத்தன் விநாயகர் கோவில நகையை திருடிட்டு ஓடிட்டானாம். அவன துரத்தி பிடிச்சி செமையா அடிச்சாங்களாம். ஆனா அவனுக்கு வலிக்கவே இல்லையாம்… ஏன்?
நபர் 2 : என்னவா இருக்கும்… தெரியலையே நீயே சொல்லு!!
நபர் 1 : அவன கொழுக்கட்டையால அடிச்சாங்களாம்.
நபர் 2 : ??
நண்பன் 1 : நேத்து ஏன்டா டல்லா இருந்த?
நண்பன் 2 : நேத்து என் பொண்டாட்டி ரூ.20,000க்கு புடவை எடுத்திட்டா அதான்.
நண்பன் 1 : அப்பறம் இன்னைக்கு மட்டும் சந்தோஷமா இருக்க?
நண்பன் 2 : அந்த புடவைய உன் பொண்டாட்டிக்கிட்ட காட்ட போயிருக்கா….
நபர் 1 : வருஷத்துக்கு ஒரு தடவ வரும் பசி… அது என்ன பசி? சொல்லு பார்ப்போம்…
நபர் 2 : என்ன கொலப்பசியா?….
நபர் 1 : அதான் இல்லை…. ஐப்பசி…
நபர் 2 : ??
நோயாளி : டாக்டர் என்னை நாய் கடிச்சிருச்சி..
டாக்டர் : எந்த இடத்துல..
நோயாளி : பெருமாள் கோவில் சந்துல…
நபர் 1 : ஒருத்தனுக்கு ரொம்ப களைப்பு… வேகமா போய் பேனை போட்டான். ஆனா பேன் ஓடவே இல்ல… ஏன்?
நபர் 2 : ஏன்னா… பேன் ஓடாது… சுத்தும்…
நபர் 1 : ??
நபர் 1 : ஹார்டுவேர்ன்னா என்ன சாப்ட்வேர்னா என்ன.?
நபர் 2 : செடிய புடுங்கினா வருவது சாப்ட்வேர்… மரத்த புடுங்கின வருவது ஹார்டுவேர்…
நபர் 1 : ??
சும்மா…. ஒரு கடி..
..
நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?
எல்லா ஸ்டேஜுலையும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜுல டான்ஸ் ஆட முடியுமா?
லாரில கரும்பு ஏத்துனா காசு… கரும்புல லாரிய ஏத்துனா ஜூசு…