நண்டு சூப் செய்வது எப்படி..!!

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
நண்டு – அரை கிலோ
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
வெங்காயத் தாள் – 3
பூண்டு – 4 பல்
பால் – கால் கப்
மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி
கான்ப்ளார் பவுடர் – ஒன்றரை தேக்கரண்டி.

செய்முறை :

பூண்டு, இஞ்சி, வெங்காயம் மற்றும் வெங்காயத்தாளை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். கான்ப்ளாரை பாலில் கரைத்து கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், நண்டை நன்றாக சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நன்றாக எடுத்து ஆறவிட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

வெங்காயத்தாளை நன்கு பொடி, பொடியாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து கொள்ளவும். கொதித்ததும், நண்டு சதையை எடுத்து அதில் போட்டு, கான்ப்ளார் கலந்த பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பின்னர், ஒரு கப்பில் ஊற்றி பின்னர் அதில் மிளகுத் தூள் லேசாக தூவி, நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்தால் சுவையான நண்டு சூப் ரெடி.!

குறிப்பு: இது ஜலதோஷம் பிடித்தால் விரைவாக விரட்ட பயன்படும்.