வனிதாவை போல உள்ளே நுழையும் அடுத்த போட்டியாளர்.!

கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றது. எதிர்பாராத வகையில் சரவணன் வெளியேறியது. மதுமிதா தற்கொலை முயற்சி என பல விஷயங்கள் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், சரவணன் வெளியேறி உடனே வைல்ட் கார்டு என்ட்ரியாக கஸ்தூரி உள்ளே நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக சர்ச்சை நாயகியான வத்திகுச்சி வனிதாவை உள்ளே அழைத்து வந்தனர்.

அதன் பின்னர் கஸ்தூரி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு சீக்ரெட் ரூம் வாய்ப்பு கிடைத்த பின்னர் கூட அதனை ஏற்க மறுத்து கஸ்தூரி வெளியேறிவிட்டார்.

இவ்வாறான, சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வெளியேறுவதும், மீண்டும் அவர்கள் உள்ளே நுழைவதுமாக நடந்தேறி வருகின்றது. கடந்த வாரம் வெளியேறிய மதுமிதா, மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸில் வருகிறார் என சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஏனென்றால் ஏற்கனவே மதுமிதாவுக்கு, பிக்பாசுடன் சம்பள பிரச்சனை என கூறப்பட்டது. இதனை வைத்துப் பார்க்கும் பொழுது மதுமிதா உள்ளே வருவது கடினம் தான் என கூறப்படுகிறது. ஆனால், கமல் கூறுவது போல எதிர்பாராத விஷயங்களை எதிர்பாருங்கள் என மதுமிதாவை உள்ளே அனுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!