நடுரோட்டில் மாணவியை கத்தி கதற வைத்த டிரைவர்..!

திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தில் உள்ள டி.கரிசல் பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவி உசிலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு செல்வதற்காக தோழிகளுடன் அங்குள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நடுரோட்டில் மாணவியை வழிமறித்தார். மிகவும் ஆவேசமாக காணப்பட்ட அவர், மாணவியிடம் நடுரோடு என்று கூட பார்க்காமல் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றார். மாணவி அபயக்குரல் எழுப்பவே, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வாலிபர் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிந்துப்பட்டி போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் டி.கரிசல்பட்டி தோட்டத்து வீடு பகுதியைச் சேர்ந்த தனபாண்டி (வயது 23) என்பதும், அவர் மாணவியை ஒருதலையாக காதலித்ததும் தெரிய வந்தது. தனபாண்டி தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.