ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்ட கன்றுக்குட்டி.! பசு செய்த காரியம்…

திருச்சியை அடுத்த மன்னார்புறத்திலிருந்து கேகே நகருக்கு நேற்று மதியம் ஆட்டோ ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது காஜாமலை காலனி அருகே சென்ற போது அந்த வழியாக தெருவில் நடந்து வந்த கன்று குட்டியின் மீது ஆட்டோ மோதி உள்ளது. இதன் காரணமாக ஆட்டோ சாலையில் கவிழ்ந்துள்ளது.

இதில் ஆட்டோ ஓட்டுனருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த ஆட்டோ மோதியதில் கன்றுகுட்டி ஒன்று தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடி வந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தினார்கள்.

குட்டி அடிபட்டு கிடப்பதை பார்த்த தாய் பசுவானது கன்றுக்குட்டியின் அருகே சென்று நாவால் தடவிக் கொடுத்தது. மேலும் உடனிருந்த பசுக்களும் இதையே செய்தது. இந்த சம்பவமானது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பின்னர் தாய்ப் பசுவை அங்கிருந்து விரட்டி விட்டு கன்றுக்குட்டிக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர்.

பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.