இந்திய அணியிலிருந்து ஓரம்கட்டப்படும் தோனி!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின், வெஸ்ட் இண்டீஸில் தொடரில் இருந்து விலகிய தோனி ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். தற்போது ராணுவத்தில் இருந்து திரும்பியுள்ளார்.

தோனி இந்திய அணியில் இல்லாத நேரத்தில் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரின்போதும் மீண்டும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையே தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்தையே அணியில் இடம் பெற்றால் தோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே. கடுமையான விமர்சனத்திற்கு இடையிலும் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறார்.