கைதாக போகும் பிக்பாஸ் பிரபலம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். அதனை தொடர்ந்து பல பிரச்சினைகளை எழுப்பிய அவர் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மீராவிற்கு கடந்த இரு வருடங்களுக்கு முன்பு எழும்பூர் சேர்ந்த ஜோமைக்கேல் என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண பிரச்சினை ஏற்பட்டுள்ளது அதனால் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மீரா மிதுன் ஜோ மைக்கேலுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய செல்போன் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மைக்கேல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மீரா மிதுன் மீது இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து விசாரணைக்குமீரா மிதுன் பதிலளிக்க மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து மீண்டும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.