ஹக்கீமின் திருவிளையாடல்கள் அம்பலம்!!

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கீழ் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சில் இணைப்பார்களாக நியமிக்கப்பட்ட 85 ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் 160 மில்லியன் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதை கோப் குழு நேற்று வெளிப்படுத்தியது.

நேற்று நடைபெற்ற கோப் அமர்வில் 85 ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் 35 பேர் எரிபொருள் கொடுப்பனவு உட்பட 250,000 ரூபா மாத ஊதியத்தை தொடர்ந்து பெற்று வருகின்றனர் என்பது தெரியவந்தது.

கோப் தலைவர் சுனில் ஹந்தன்நெத்தி, தேசிய ர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அதிகாரிகளுக்கு, அந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.