இந்தியாவில் பிரபல சாமியார் ஒருவர் சிறுமிகள், பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள பகிடா கலா கிராமத்தில் அமைந்துள்ளது சாமியார் ஜோதிகிரிக்கு சொந்தமான ஆசிரமம்.
இந்நிலையில் சாமியார் ஜோதிகிரி சிறுமிகள், பெண்களை பலவந்தப்படுத்தி சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரலானதை தொடர்ந்து சாமியார் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், ஜோதிகிரியின் வீடியோ குறித்து சைபர் க்ரைம் பொலிசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதில் தொடர்புடைய மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம், சாமியார் பிடிபட்டவுடன் மேலும் தகவல்கள் வெளியாகும் என கூறியுள்ளனர்.